Wednesday, May 12, 2021

லவ குசா படம்.ஜகம் புகழும் புண்ணிய கதை ராமனின் கதையே! உங்கள் செவி குளிரப் பாடுகிறோம் கேளுங்கள் இதையே! பாடல் மெட்டு


 லவ குசா படம்.ஜகம் புகழும் புண்ணிய கதை ராமனின் கதையே! உங்கள் செவி குளிரப் பாடுகிறோம் கேளுங்கள் இதையே!

பாடல் மெட்டு


உலகம் போற்றும் 

புனிதக் கதை ராமனின் கதையே!


உங்கள் மனம் மகிழ

பாடுகிறேன்

மகிழுங்கள் இனிதே!


உலகம் போற்றும்

புனிதக் கதை ராமனின் கதையே!


உங்கள் மனம் மகிழ

பாடுகிறேன்

மகிழுங்கள் இனிதே!


பேரின்ப வாழ்வெல்லாம்

பெற்றிடலாமே!


இந்த கதைக கேட்கும்

எல்லோருமே!


சிலிர்க்குது உடலெல்லாம் 

பாடிடும் போதிலே


அருளே அளித்திடும்

நல் காவியமாகும்!


உலகம் போற்றும் 

புனிதக் கதை ராமனின் கதையே!


உங்கள் மனம் மகிழ

பாடுகிறேன்

மகிழுங்கள் இனிதே!


அயோத்தி அரசன் 

தசரதனின் அருள் வேள்வியால்


அவன் மனைவி கெளசல்யா கைகேயி

சுமித்ரை!


கண்ணியமாய் ஈன்றனர்

 ராம இலட்சுமணர்!

அன்புள்ள பரதன் சத்ருகன் நால்வர்!


ஆ..ஆ..ஆ..ஆ..ஆ


சான்றோர் வாழ்த்தவே

நால்வரும் அரும் கலை


நான்மறை பயில மன்னன்

அனுமதித்தானே!


காட்டில் கெளசிகன் 

யாகத்தை காக்கவே!


கனிவுள்ள இராம லட்சுமணனை அனுப்பினானே!


காட்டில் கெளசிகன் யாகத்தை காக்கவே


கனிவுள்ள இராம லட்சுமணனை அனுப்பினானே!


தாடகை சுபாஹூவை

கதையினை முடிக்கவே


தவமுனி வேள்வி காத்து ஆசி பெற்றனரே!


தாடகை சுபாஹூவை

கதையினை முடிக்கவே


தவமுனி வேள்வி காத்து ஆசி பெற்றனரே!


கல்லான அகலிகை

சாபம் தீர்த்த பின்


கல்லான அகலிகை 

சாபம் தீர்த்த பின்


புகழ்மிகு  மிதிலை நோக்கி நடந்து சென்றனரே!


வழிதனில் போகும் போதிலே இராமன்



சீதையை மாட மாளிகையிலே 

கண்டான்!


வழிதனில் போகும் போதிலே இராமன்


சீதை மாட மாளிகையிலே 

கண்டான்!


அன்பு கொள் இருவரும்

கண்ணால் பேசினர்!


அன்பு கொள் இருவரும்

கண்ணால் பேசினர்!


வீரமாய் வில்லொடித்தே 

மைதிலியை மணந்தான்!


கர்வமிகு மதிஇழந்த 

பரசுராமன்

ஆணவந்தனை

அடக்கி இராமன் விஜயம் கொண்டான்!


அரும் செயல் புரிந்த

மகனை அரசன்


அகமகிழ்ந்து அணைத்துக் கொண்டான்!


உலகம் போற்றும் புனிதக் கதை ராமனின் கதையே!


உங்கள் மனம் மகிழ

பாடுகிறேன் 

கேளுங்கள் இனிதே!


உலகம் போற்றும் புனிதக் கதை ராமனின் கதையே!


அரசன் தசரதன் கார்முகில் ராமனுக்கு


மணிமகுடம் சூட்டவே

நாள் கணித்தானே!


அரசன் தசரதன் கார்முகில் ராமனுக்கு


மணிமகுடம் சூட்டவே

நாள் கணித்தானே!


மானிடர் அனைவரும் 

மகிழ்ச்சியில் நகரையே


மாவிலை தோரணத்தால்

விழா எடுத்தனரே!


குனியின் சொல் கேட்டு

உளம் மாறிய கைகேயி


அரசு உரிமை பரதனுக்களித்து நாட்டை ஆளவும்


வனத்தில் ராமன்

ஈரேழு ஆண்டுகள் வாழ


அரசனிடம் இருவரம்

கேட்டாள்!


அந்த வரங்கள் வழங்கிய மன்னன்!


களைப்புற்று விழுந்த 

பின்னர்


அண்ணலை அழைத்திட செய்தாள்!


அரசன் உனை வனம்

புகச் சொல்லி


தம்பி பரதனுக்கு 

அரசு ஈந்தார் என்றாள்!


சங்கடம் கொள்ளாமல்

சகேத ராமனும்


சரியென தாயே என

துதித்து சென்றான்!


வீர் கொண்டு கோபமுற்று

வில்லெடுத்த


தம்பி இலக்குவனை 

சாந்தமாக்கினான்!


ஜானகியும் ராமனும்

மரவுரி தரித்து செல்லவே


இலக்குவன் அவர் பின்

தொடர்வதைக்கண்டு


ஜானகியும் ராமனும்

மரவுரி தரித்து செல்லவே


இலக்குவன் அவர் பின்

தொடர்வதைக் கண்டு


கலங்கிய நகர மக்கள்

கண்ணீர் மல்கியே


ஆ..ஆ.ஆ...ஆஆ...


கலங்கிய நகர மக்கள்

கண்ணீர் மல்கியே


கண்மணி ராமன்

போகும் வழியை மறித்து நின்றனரே!



சோகத்தை நீக்கிய 

கருநீல வண்ணன்


கனிவுடன் அவர்களிடம்

விடையும் பெற்றானே


தந்தை சொல் மிக்க மந்திரமில்லையென


சிந்தையில் உணர்த்தியே

வனம் சென்றானே!


தந்தை சொல் மிக்க மந்திரமில்லையென

சிந்தையில் உணர்த்தியே வனம்

நாடி சென்றானே!


உலகம் போற்றும் புனிதக் கதை ராமனின் கதையே!


உங்கள் மனம் மகிழ

பாடுகிறேன்! மகிழுங்கள் இனிதே!


உலகம் போற்றும் புனிதக் கதை ராமனின் கதையே!


உங்கள் மனம் மகிழ

பாடுகிறேன் மகிழுங்கள் இனிதே!


கங்கை நதி அன்பன்!


குணத்தில் உயர்ந்த குகன்!


பண்பால் இராமபிரானின் தோழனாகினான்!


கங்கை நதி அன்பன்!


குணத்தில் உயர்ந்த குகன்!


பண்பால் ராமபிரானின் தோழனாகினான்!


பஞ்சவடி போகும் நேர்வழி காட்டினான்!


பஞ்சவடி போகும் நேர்வழி காட்டினான்!


சஞ்சலமில்லா ராமன்

அங்கு சென்று அடைந்தான்!


சஞ்சலமில்லா ராமன்

அங்கு சென்று அடைந்தான்!


தசமுகனின் தங்கை 

அரக்கியவள் சூர்ப்பனகை


தசரத மைந்தனிடம்

காதல் கொண்டாள்!


தசமுகனின் தங்கை

அரக்கியவள் சூர்ப்பனகை


தசரத மைந்தனிடம்

காதல் கொண்டாள்!


வெகுண்ட இளையோன்

சிறு அம்பால் அவளின்


மூக்கறுத்து அடித்து 

விரட்டி விட்டான்!


வெகுண்ட இளையோன்

சிறு அம்பால் அவளின்


மூக்கறுத்து அடித்து

விரட்டி விட்டான்!


தங்கையின் துர்போதனையால்

தசமுக இராவணன்


சீதா தேவியை சிறை பிடித்தான்!


தங்கையின் துர்போதனையால்

தசமுக இராவணன்


 சீதா தேவியை 

 சிறை பிடித்தான்!

மதியே கலங்கிட

கண்களே கடலாகி


இளையவனுடன் சீதையை தேடிச் சென்றான்!


ராமன் வாடிச் சென்றான்!


பாதையிலே ஜடாயுவிடம் விவரம் கேட்டறிந்தான்!


அஞ்சனை மைந்தன்

அனுமானின் தோழமைக் கொண்டான்!


கடலைத் தாண்டி இலங்கை அடைந்த அனுமான்


அன்னையை (அ)சோக வனக்கடலில் கண்டான்!


ராமதாசனாய் நான் வந்தேனடா! இராவணா என்றான்!


அனுமான் தீவிற்கே

 தீ வைத்து கிஷ்கிந்தை 

 அடைந்தான்!

ராம தாசனாய் நான் வந்தேனடா! இராவணா 

என்றான்!


அனுமான் தீவிற்கே 

தீ வைத்து கிஷ்கிந்தை

அடைந்தான்!


கண்டேன் கற்பிற்கு அணியே என்றே ராமனிடம் சொன்னான்!


கண்டேன் கற்பிற்கு அணியே என்றே ராமனிடம் சொன்னான்!


கடலில் பாலம் கட்டி 

அண்ணல் இலங்கையை அடைந்தான்!


வானர சேனையுடன்

அடைந்தான்!


விபிஷணின் சரணாகதியை ஏற்றான்!

தசமுகனை வென்றான்!


விபிஷணனின் சரணாகதியை ஏற்றான்!

தசமுகனை வென்றான்!


பூமி மாதா 

சீதையை தானே

தீ குளிக்க செய்தான்!


ஆஆஆஆஆஆஆஆ


தீக்குளிக்க செய்தான்!


கற்பின் அணங்கை

களிப்புடன் ஏற்று 

அயோத்தி நகர் அடைந்தான்!


கலங்கிய மக்கள் கவலையைத் தீர்த்த 

ராமன் மணி மகுடம்

ஏற்றான்!


மணிமகுடம் 

ஏற்றான்!

ஆ...ஆ...ஆ.....ஆ....ஆ


உலகம் போற்றும் புனிதக் கதை ராமனின் கதையே!

உங்கள் மனம் மகிழ

பாடுகிறேன் மகிழுங்கள் இனிதே!


உலகம் போற்றும் புனிதக் கதை ராமனின் கதையே!


உங்கள் மனம் மகிழ

பாடுகிறேன் மகிழுங்கள் இனிதே!


உலகம் போற்றும் புனிதக் கதை ராமனின் கதையே!


T. Srinivasan


No comments:

Post a Comment