சாந்தி நிலையம் படம்.
இயற்கை என்னுகம்
இளைய கன்னி
ஏங்குகிறாள்
துணையை எண்ணி
பாடல் மெட்டு
பக்தி ஒன்றே
சிறந்த வழி!
அவன் பாதங்களில்
நாம் சரணாகதி!
பக்தி ஒன்றே
சிறந்த வழி!
அவன் பாதங்களில்
நாம் சரணாகதி!
பக்தி ஒன்றே
சிறந்த வழி !
அவன் பாதங்களில் நாம் சரணாகதி!
பொங்கி வரும் பக்திக்கு
எல்லை இல்லையே!
போதுமென்ற மனதிற்க்கு துன்பமில்லையே!
பொங்கி வரும் பக்திக்கு
எல்லை இல்லையே!
போதுமென்ற மனதிற்க்கு துன்பமில்லையே!
கார்முகில் வண்ணன்
குழல் எடுத்தான்!
கார்முகில் வண்ணன்
குழல் எடுத்தான்!
செவிகளுக்கு
நல் விருந்தளித்தான்!
பக்தி ஒன்றே
சிறந்த வழி!
அவன் பாதங்களில் நாம் சரணாகதி!
வேணு கான ஒலியில்
மான் மயங்குதே!
வேணுகோபாலன் கருணையில் மனம்
உருகுதே!
வேணு கான ஒலியில்
மான் மயங்குதே!
வேணுகோபாலன்
கருணையில் மனம்
உருகுதே!
கண்ணன் அருளால்
கண்ணன் அருளால்
கவிதை மலருமே!
மடை திறந்த
பெரு நதியாகுமே!
பக்தி ஒன்றே
சிறந்த வழி!
பாதங்களில்
நாம் சரணாகதி!
காளியன் கர்வதனை
அழிந்திடவே!
கண்ணன் அதன் தலையில் நடனமாடவே!
காளியன் கர்வதனை
அழித்திடவே!
கண்ணன் அதன் தலையில் நடனமாடவே!
காண்பது என்றும்
நல் பாக்யமே!
கங்காதரனும் காண
வந்தாரே!
காண்பது என்றும்
நல் பாக்யமே!
கங்காதரனும் காண வந்தாரே!
பக்தி ஒன்றே
சிறந்த வழி!
அவன் பாதங்களில் நாம் சரணாகதி!
ஆஆஆஆஆஆஆஆ
லலலலலலலலலல
T. Srinivasan
AG's office (Retired)
West Mambalam.
No comments:
Post a Comment